சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து உயிர்காக்கும் கருவிகளால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அமைச்சர் துரைக்கண்ணு தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறார்.  அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியாகி உள்ளது. அவரது நுரையீரல் 90 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து,   எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்எ ன  பலரும் நேரில் சென்று மருத்துவர்களிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.  இந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் செயல்படுவதில் சவாலாக  இருப்பதாகவும், செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது..

முன்னதாக தமிழக வேளாண்துறைஅமைச்சர் அமைச்சர் துரைக்கண்ணு  கடந்த 13ஆம் தேதி  விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை  அளிக்கப்பட்ட நிலையில்,  மேல் சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதுமில்லை என்றும் மருத்துவக் குழுவினா் அவரை தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும்  காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.