சென்னை:

மிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் 60 சதவிகித இருக்கைகளில் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் தற்போது வைரஸ் பரவல் பெருமளவு குறைந்துள்ளதையடுத்து, பேருந்துகளில் பயணிகள் 100 சதவிகித இருக்கை வசதியையும் பயன்படுத்த தமிழக அரசு இன்று முதல் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தேவைக்கேற்ப பேருந்துகளை அதிகரித்துக் கொள்ளவும் போக்குவரத்து கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.