தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியிட் விக்கெட் கீப்பராக இருப்பவர் த்ரிஷா செட்டி. கீப்பிங்கில் 134 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ள இவர் தற்போது நடந்து வரும் மகளிர் உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீராங்கனையாக ஜொலிக்கிறார்.

இவர் ஒரு தமிழ்ப்பெண் என்பது பலருக்கும் தெரியாது. ஆம்… இவரது பூர்வீகம் சென்னை. த்ரிஷா, “தமிழ்ப்பெண் என்பதை பெருமையுடன் நினைக்கிறேன். சென்னையில் எங்களது உறவுக்காரர்கள் பலர் இருப்பதாக என் பெற்றோர் கூறியிருக்கிறார்கள்.

அவர்களைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். இந்திய கிரிக்கெட் அணியும் தென்னாப்பிரிக்காவும் மோதினால் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவேன். மற்ற அணிகளோடு விளையாடினால், இந்தியாவுக்குத்தான் என் ஆதரவு’ என்கிறார் த்ரிஷா.