புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை பொறுப்பு ஆளுநராக நாளை காலை 9 மணிக்கு தமிழிசை சவுந்தர ராஜன் பொறுப்பேற்கிறார்.

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி நேற்று அதிரடியாக அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் ஆக நியமனம் செய்யப்பட்டார்.

கூடுதல் பொறுப்பாக துணை நிலை ஆளுநராக அவர் செயல்படுவார் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். இந் நிலையில், புதுச்சேரி துணை நிலை பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கான ஆணையை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனிடம் புதுச்சேரி ஆணையர் வழங்கினார். இதையடுத்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக தமிழிசை  சவுந்தர ராஜன் நாளை காலை 9 மணிக்கு பொறுப்பேற்கிறார்.