சென்னை,

திமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலில், டிடிவிக்கு ஆதரவாக 19 எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு கொறடா பரிந்துரையின் பேரில் சபாநாயகர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதன் காரணமாக அவர்களின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு நிலவி வருகிறது.

இவர்கள் 19 பேரும் கடந்த வாரம் கவர்னரை சந்தித்து, முதல்வர் எடப்பாடிமீது நம்பிக்கை இல்லை என்றும், அவருக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்று தனித்தனியாக  மனு கொடுத்தனர்.

இவர்களின் மனுவை கவர்னர் நிராகரித்த நிலையில், அதிமுக அரசு கொறடா ராஜேந்திரன் அவர்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலுக்கு  பரிந்துரை செய்திருந்தார்.

இதைத்தொடந்து அவர்களுக்கு, கடந்த வாரம் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பிருந்தார். ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனிடையே, நேற்று முன் தினம் தனபாலைச் சந்தித்து, தங்க தமிழ்ச்செல்வன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோர் சந்தித்து விளக்கம் அளித்தனர்.

அவர்களின் விளக்கம் சரியல்ல என்று மீண்டும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் தற்போது அளித்துள்ள விளக்கத்தை, இடைக்கால பதிவாக மட்டுமே கருத முடியும் . ஆகவே மீண்டும் விளக்கம் தேவை என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூடு வதற்கு முன்பு இவர்களின் எம்எல்ஏக்கள் பதவிகள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.