லண்டன்:

ங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்மணி போட்டியிட்டு வென்றுள்ளார்.

இங்கிலாந்தின் மிகப் பணக்கார மாநகராட்சி, அந்நாட்டின் தலைநகர் லண்டன் மாநகராட்சிதான். இங்கு உள்ள 25 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் வின்ட்ரை  என்ற வார்டின் கவுன்சிலர் பதவிக்கு  தமிழகத்தைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் ரெஹானா அமீர் (வயது 43) போட்டியிட்டார். இவர் சென்னையில் பிறந்து, வளர்ந்தவர்.

இந்த உள்ளாட்சி தேர்தலில் அவர் சுயேச்சை வேட்பாளராக  போட்டியிட்டு வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர   லண்டன் மாநகராட்சியில் கவுன்சிலரான முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

தனது வெற்றி குறித்து கருத்து  தெரிவித்த ரெஹானா அமீர், “கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நான், சாலை பாதுகாப்பு, காற்றை தூய்மைபடுத்துதல், மன ஆரோக்கியம் உள்ளிட்ட விஷயங்களில் மிகவும் அக்கறை செலுத்துவேன். தவிர அனைத்து வகையான தொழில்களுக்கும் சிறந்த பிரதிநிதித்துவம் அளிப்பேன்” என தெரிவித்தார்.

மேலும், “ லண்டன் நகரின் தொழில்களை சர்வதேச சந்தைகளில் ஊக்கப்படுத்துவதோடு, கடல் கடந்து விரிவுபடுத்துவேன்” என்றும் ரெஹானா தெரிவித்தார்.