கன்னியாகுமரி:

கி புயல் நிவாரணத்துக்காக  ரூ. 4, 047 கோடி அளிக்கும்படி பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவுகளில் ‘ஒக்கி’ புயல் பாதித்த பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். கன்னியாகுமரியில் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலமாக மோடி வந்தார்.  அவரை தமிழக கவர்னர் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மற்றும்  அரசு உயரதிகாரிகள் வரவேற்றனர்.

பிறகு  தமிழக முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் புயல் பாதிப்பை பிரதமரிடம் விளக்கிக் கூறினர்.  அப்போது தமிழக அரசு சார்பில் ஒகி புயல் நிவாரண நிதி கோரி, பிரதமரிடம் கோரிக்கை மனுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்தார். அந்த மனுவில் புயல் பாதிப்பு நிவாரணமாக ரூ.4047 கோடி  வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த ஆலோசனையின்போது கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, குமரி அரசு விருந்தினர் மாளிகையில் மீனவ மற்றும் விவசாய பிரதிநிதிகளை மோடி சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களின் குறைகளை  கேட்டறிந்தார். அப்போது புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க வேண்டும்  என்றும்  புயலால் சேதம் அடைந்த பயிர்கள் மற்றும் படகுகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்றும்  புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.