சென்னை:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு பொதுமக்களிடையே உரையாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட உள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று முற்பகல் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து,  இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொது மக்களிடையே உரையாற்ற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.