டில்லி,

கில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்த அவருக்கு போட்டியாக இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால்,  போட்டியின்றி அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏற்கனவே  கடந்த நவம்பர் 20ந்தேதி நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுப்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. இன்று வேட்புமனு தாக்கல் கடைசி நாள். இன்று ராகுல்காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல்காந்திக்கு தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில், முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர்,  கிருஷ்ணசாமி, செல்லக்குமார், வாழப்பாடி ராமசுகந்தன் உள்பட முக்கிய நிர்வாகிகள் சால்வை அணித்து வாழ்த்து தெரிவித்தனர்.