சென்னை: தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் ஈடுபட்டு இருப்பதாவது: தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,79,046 ஆக அதிகரித்து உள்ளது.

220 ஆய்வகங்களில் இன்று மட்டும் 66,063 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து ஒட்டு மொத்தமாக 1 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரத்து 240 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு இருக்கின்றன.

இன்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 878 பேர் ஆண்கள் ஆவர்.  552 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா பாதித்த ஒட்டுமொத்த ஆண்களின் எண்ணிக்கை 4,70,670. பெண்களின் எண்ணிக்கை 3,08,342 ஆகவும், 3ம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34 ஆகவும் இருக்கிறது.

மருத்துவமனையில் இருந்து இன்று மட்டும் 1,453 பேர் குணம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். ஒட்டு மொத்தமாக வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 56 ஆயிரத்து 279 ஆக உள்ளது.

ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 13 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11,694 ஆக உயர்ந்து உள்ளது. இன்னமும் 11,073 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று அந்த  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.