சென்னை: தமிழகத்தில் மேலும் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது கொரோனா. தமிழகத்தில் தினமும் கொரோனா தொற்று விவரங்களை சுகாதாரத் துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்றும் கொரோனா தொற்று பற்றிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. தமிழகத்தில் மேலும் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்தது. அதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,377 ஆக அதிகரித்துள்ளது.

53 பேர் உயிரிழந்துள்ளதால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் இன்று மட்டும் 1,493 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,172 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1,438 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,754 ஆக அதிகரித்துள்ளது.