சென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை கூறி இருப்பதாவது: 2886 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,06,136 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 35 பேர் கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழக்க மொத்த பலி எண்ணிக்கை 10,893 ஆக உயர்ந்துள்ளது.  ஜூன் 24ம் தேதி 2,865 ஆக இருந்த பாதிப்பு, சரியாக 4 மாதங்களுக்கு பின் மீண்டும் 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 779 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1.95 லட்சமாக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் 169 பேர், காஞ்சிபுரத்தில் 140 பேர், திருவள்ளூரில் 165 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக கோவையில் 287 பேர், திருப்பூரில் 101 பேர், சேலத்தில் 148 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4,024 பேர் டிஸ்சார்ஜ் ஆக, குணமடைந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 6,63,456 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 31,787 பேர் இன்னமும் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.