சென்னை :

மிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் :

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1819 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,58,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11,478 பேர் உயிர் இழந்துள்ளனர்.

7,30,272 பேர் குணம் அடைந்த நிலையில் தற்போது 16,441 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 502 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,08,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 3,765 பேர் உயிர் இழந்ததாக புள்ளிவிவரம் கூறுகிறது. 1,99,805 பேர் குணம் அடைந்து தற்போது 5,098 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 46,408 பேர் பாதிக்கப்பட்டு 586 பேர் உயிர் இழந்த நிலையில், 44,936 பேர் குணம் அடைந்து தற்போது 886 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 45,893 பேர் பாதிக்கப்பட்டு 695 பேர் உயிர் இழந்த நிலையில் 44,290 பேர் குணம் அடைந்து தற்போது 908 பேர் சிகிச்சையில் உள்ளனர்.