சென்னை :

மிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட வாரியான பட்டியல்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1442 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,77,616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11,681 பேர் உயிர் இழந்து 7,54,826 பேர் குணம் அடைந்து தற்போது 11,109 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 392 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,14,191 பேர் பாதிக்கப்பட்டு இதில் 2,06,429 பேர் குணம் அடைந்து தற்போது 3,924 பேர் சிகிச்சையில் உள்ளனர், 3,838 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது இங்கு இன்று 145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கோவை மாவட்டத்தில் 48,279 பேர் பாதிக்கப்பட்டு 607 பேர் உயிர் இழந்துள்ளனர். 46,931 பேர் குணம் அடைந்து தற்போது 741 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 77 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 47,301 பேர் பாதிக்கப்பட்டு 45,894 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 695 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் இங்கு இதுவரை 712 பேர் உயிர் இழந்துள்ளனர்.