சென்னை,

மிழக அரசு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்து உள்ளது.

மத்திய அரசுக்க இணையான ஊதியம், புதிய பென்சன் திட்டம் எதிர்ப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க செயலாளர் அறிவித்து உள்ளார்.

இந்த போராட்டத்தில் தமிழகத்திலுள்ள அரசு ஊழியர்கள் சுமார்  4 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளதாக அரசு ஊழியர் சங்க செயலர் அன்பரசன் கூறியுள்ளார்.

எதிர்கட்சிகள் சார்பில் நாளை தமிழகத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற உள்ள  நிலையில் அரசு ஊழியர்களின்  காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இதன் காரணமாக நாளை அரசு அலுவலகங்களும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.