தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 12 சதவீதமாக இருந்து வந்த நிலையில், அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதன்படி, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேநேரம், இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ம் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்பட உள்ளது.

முன்னதாக கடந்த அக்டோபர் 9ம் தேதி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 5 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.