பெண் குழந்தைகளை பாதுகாப்பாதில் சிறப்பாக செயல்பட்டதால் தமிழக அரசிற்கு மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது. தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழகம் 2விருதுகளை வென்றது.

female

தேசிய பெண் குழந்தைகள் தினம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் டெல்லியில் கொண்டாடப்பட்டது. இதில் பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் மத்திய அரசின் ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்’ என்ற திட்டத்தை சிறப்பான செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டது.

இதேபோன்று மக்க்ள் மத்தியில் இந்த திட்டத்தை எடுத்து சென்றதில் முதலிடம் பெற்ற தமிழகத்தை சேர்ந்த திருவண்ணாமலை மாவட்டத்திற்கு விழாவில் விருது வழங்கபட்டது. இந்த இரண்டு விருதுகளையும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி வழங்கினார். விருதுகளை தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உள்ளிட்டோர் விருதை பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தனக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து தமிழக அரசின் விருது பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி நந்தினி சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.