சென்னை:

ரேசன் கார்டுதாரர்களுக்கான பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்துள்ளார்.

பொங்கல் திருநாளுக்கு அரிசி வாங்கும் பிரிவை சேர்ந்த ரேசன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிச்சி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு துண்டு கரும்பு மற்றும் ரூ.100 ரொக்கம் என சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்து வழங்கி வந்தார்.

கடந்த மாதம் 5ம் தேதி உடல் நலக்குறைவினால் ஜெயலலிதா மரணமடைந்தார். அவருக்குப் பின்னர் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு திட்டத்தை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று அறிவித்துள்ளார்.

இதன்படி ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்த ஆண்டு ஒரு கிலோ பச்சரிச்சி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு துண்டு கரும்பு மற்றும் ரூ.100 ரொக்கம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மொத்தம் 1.82 கோடி ரேசன் கார்டுதாரர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது