சென்னை:

மிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான  பண்டிகைகால முன்பணம்  ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் இதுவரை ரூ.5 ஆயிரமாக இருந்து வந்த நிலையில், நடப்பு ஆண்டு முதல் ரூ. 10,000 ரூபாயாக உயர்த்தப்படும் என கடந்த மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை மானியக்கோரிக்கைத் தொடரில் துணைமுதல்வர்  ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணத்தை 5,000  ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி தமிழகஅரசு அரசாணை  வெளியிட்டு உள்ளது.  தமிழக  நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் அரசாணை வெளியிட்டு உள்ளார் .