சென்னை:

தமிழகம் முழுவதும் முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமை செயலக செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;

புதிய பதவிகளின் விபரம்:
ஆனந்த்ராவ் விஷ்ணு பட்டேல்- மின் ஆளுமை ஆணையர்.
இன்னசன்ட் திவ்யா- உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர்.
பிரபுசங்கர் – திண்டிவனம் உதவி கலெக்டர்.
ஷமீரன்- மீன் வளதுறை கூடுதல் ஆட்சியர், ராமநாதபுரம்.
ஆகாஷ்- சேரன்மகா தேவி உதவி கலெக்டர்.
லலிதா- சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர்.
அமர்குஷாவா- உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர்.
ராகுல்நாத்- ஊரக மேம்பாட்டு துறை செயலர்.
கஜலட்சுமி- சேலம் மேக்னசைட் லிமிட்டெட் மேலாண் இயக்குனர்.
ஸ்ரீதர்- தர்மபுரி சர்க்கரை கூட்டுறவு ஆலை நிர்வாக இயக்குனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.