சென்னை:

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்த அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆணையத்தின் தற்காலிக தலைவராக மத்திய நீர் வளத்துறை செயலர் யு.பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து தமிழக உறுப்பினர்களாக பொதுப் பணித் துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோரை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.