சென்னை,

ரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ஐ தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசினார். இதன் காரணமாக இரு அணியினரிடமும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை போரூரில் உள்ள மருத்துவமனையில் அவர்கள் ஓபிஎஸ்-ஐ சந்தித்தனர்.

ஓபிஎஸ்-ன் தாயார் உடல்நலமில்லாமல் போரூர் ராமச்சந்திரா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க சென்றபோது, ஓபிஎஸ் உடன் தமிழக அமைச்சர்கள் இருவரும் சந்தித்து பேசினர்.

ஓபிஎஸ்-ன் கோரிக்கைகளை தமிழக முதல்வர் எடப்பாடி நிறைவேற்றியுள்ள நிலையில், இரு அணிகளின் இணைப்பு குறித்து இன்று மாலை அறிவிப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி அணியை சேர்ந்த இரு அமைச்சர்கள் ஓபிஎஸ்-ஐ சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.