சென்னை:

மிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரிகளில், கால்நடை மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல்நாளான இன்ற சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பிவிஎஸ்சி எனப்படும் கால்நடை மருத்துவப்படிப்புக்கு 460 இடங்கள் உள்ளன.  இதற்கான கால்நடை மருத்துவக்கல்லூரிகள்  சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் உள்ளது.

இங்கு கால்நடை மருத்துவம் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான தேதி மே 8ம் தேதி முதல் ஜுன் 10ம் தேதி கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது  கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழக  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கடந்த 3ந்தேதி தர வரிசைப் பட்டியலை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து, இன்று சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு தொடங்கி உள்ளது.  இன்றுமுதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதல்நாளான இன்று சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

நடப்பாண்டில் B.V.Sc., படிப்புக்கும், பி.டெக் படிப்புக்கும் சேர்த்து 18 ஆயிரத்து 438 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அழைப்புக் கடிதம் பெற்ற மாணவர்கள், அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும் என்றும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.