a

தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியை  சேர்ந்த உறவு சாமிநாதன் சிவசாமி(சசி) இவருக்கு வயது 40.    இவருக்கு மனைவி, 7 மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள்
உள்ளனர். . இவர் குவைத்தில் உள்ள UGS   கம்பெனியில் ஓட்டுநராக வேலை செய்து வந்த நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இவரை குவைத்தில் உள்ள அதான் (Adan Hospital)மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவருடைய குடும்பத்தினர் தகவல் தெவித்தனர். அதனால் இந்த செய்தி இந்த பக்கத்தில் 5 நாட்களுக்கு முன்பு பதிவு செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். நாங்கள் விசாரித்தல் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்து தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மூளைச்சாவு அடைந்தார் ( Braindead) அடைத்தார்
என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர் இன்னும்
சாதாரண வாழ்க்கைக்கு திரும்பமாட்டார் என்பதை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவருடைய உடல் உறுப்புகள் தானம்   வழங்கினால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் சிலரை இந்த உலகில் வாழவைக்க முடியும்  என்று மருத்துவர்கள் குவைத்தில் உள்ள அவருடைய உறவினரிடம் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில்  உள்ள சாமிநாதன் சிவசாமி(சசி) குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து உடல் உறுப்புகள் தானம்  வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் குவைத் அரசின் சட்டதிட்டங்கள் படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உடல் உறுப்புகளை மருத்துவர்கள் அகற்றி பிறருக்கு பொருத்த நடவடிக்கை எடுத்தனர்.
தான் இறந்தும் மற்ற சிலரை வாழவைத்து அவர் இந்த உலகை விட்டு பிரிந்தார்.
குவைத் சட்ட நடவடிக்கை முடிந்தது.   சாமிநாதன் சிவசாமி(சசி) உடல் நேற்று
ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் எடுத்து செல்லப்பட்டது.
அங்கிருந்து அவசர ஊர்தி மூலம் தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி அவருடைய ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.
முன்னதாக நேற்று  காலை 10 மணியவில் அவருடைய உடல் வைத்திருந்த Sabah Hospital-க்குசென்று அவரது உடலுக்கு  குவைத் வாழ் தமிழர் பலர்,  அஞ்சலி செலுத்தினர்.
Kuwait-தமிழ் பசங்க  முகநூல் பக்கத்தில் இருந்து