2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா, முகேஷ் சிங், அக்சய் குமார் சிங், வினய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் டெல்லி திஹார் சிறையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதனை பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக தமன்னா கூறியிருப்பதாவது :-

நிர்பயா வழக்குக் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டார்கள் என்ற அற்புதமான செய்தியுடன் இந்த நாளைத் தொடங்குகிறேன். நீதி வழங்கப்பட்டுவிட்டது.