தஞ்சாவூர் :

சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சிலை கடத்தில் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த போலீஸ் டிஎஸ்பி காதர்பாட்சா கடந்த மாதம் 13ந்தேதி  கைது செய்யப்பட்டார். அவர்மீது விசாரணை நடைபெற்ற வருகிறது.

இந்நிலையில், தன்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று காதர்பாட்சா தஞ்சாவூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவுக்கு அரசு சார்பாக எதிர்ப்பு தெரிவித்ததால், காதர் பாஷாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2008 ம் ஆண்டு விருதுநகர் அருகே உள்ள  ஆலடிப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் விவசாய நிலத்தில் இருந்து 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலைகளை தனது சக போலீசார் உதவியுடன்  துப்பாக்கியை காட்டி மிரட்டி, விவசாயிடம் இருந்து கைப்பற்றினார்  டிஎஸ்பி காதர்பாஷா.

பின்னர் அந்த சிலைகளை சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் 15 லட்ச ரூபாய்க்கு விற்றார். அவர் அதை  தாய்லாந்து நாட்டிற்கு கடத்தி விட்டார்.  சிலையின் தற்போதைய மதிப்பு 9 கோடி ரூபாய்.

இந்த விவகாரம் குறித்து ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் தலைமையில் விசாரணை குழு அமைக்கப் பட்டது. அதைத்தொடர்ந்து பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கைது செய்யப்பட்டார். அவரிடம்  போலீசார்  நடத்திய விசாரணையில், சிலையை கொடுத்தது டிஎஸ்பி காதர்பாஷா என்ற தகவல்  வெளிச்சத்துக்கு வந்தது.

அதைத்தொடர்ந்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்செது விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து காதர் பாஷாவுடன் இணைந்து சிலையை கொள்ளையடித்த காவலர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதையறிந்த தற்போது டிஎஸ்பியாக   காதர்பாஷா தலைமறைவாகிவிட்டார். அவரை தேடும் படலம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கும்பகோணத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.