சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய டாஸ்மாக் பணியாளர் கள் 450 டாஸ்மாக் பணியாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது மற்ற பணியாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் குடும்பங்களுக்கு 50லட்சம் ரூபாய் நிவாரணம், வாரிசுக்கு அரசு வேலை, பணி நிரந்தரம் உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், டாஸ்மாக் பணியாளர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத் தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 25ந்தேதி, காலை 10 மணி முதல் 12 மணி வரை இரண்டு மணி நேர வேலை நிறுத்தம் போராட்டம் செய்தனர்.
இநத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள் மீது டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. சென்னையில் 25 பேர் உட்பட தமிழகம் முழுவதிலும் போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேரை இடமாற்றம் செய்துள்ளது. அவர்களை அவர்கள் அனைவரும், டாஸ்மாக் குடோன்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.