சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித்தேர்வர்களுக்காக தட்கல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜனவரி 20 மற்றும் 21ம் தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கூறப்படுவதாவது; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், ஜனவரி 6 முதல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த காலஅவகாசம் நேற்றுடன் நி‍றைவுபெற்றுள்ளது. ஆனால், இந்தக் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தட்கல் முறையில், ஜனவரி 20 மற்றும் 21ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தட்கல் திட்ட விண்ணப்பதாரர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்களுக்குச் சென்று, தங்களது விண்ணப்பங்களைப் பதிவுசெய்ய வேண்டும்.

தேர்வுக்கான சேவை மையங்கள் குறித்த விபரங்களை www.dge.tn.gov. என்ற இணையதளத்தில் சென்று அறிந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.