மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஜம்மு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்முவின் கிழக்குப் பகுதியில் உள்ள தோடாவை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் வாசிம் ஹூசைன் பட். இவர் சுகாதரப் பயிற்சிப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருடன் நெருங்கி பழகினார். திருமணம் செய்வதாகக் கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்தார். அதை ஒளிப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்து வைத்திருந்தார். அதைக் காண்பித்து மாணவியை மிரட்டி, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த மாணவிக்கு வேறு மாப்பிள்ளைப் பார்த்தனர்.  இதையடுத்து அந்த மாணவியுடன் தான் நெருக்கமாக இருக்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் அந்த ஆசிரியர்  வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து பெற்றோர் விசாரித்தபோது ஆசிரியர் குறித்த தகவலை தெரிவித்துள்ளார் மாணவி. இதையடுத்து கிருஷ்வர் காவல் நிலையத்தில் பெற்ரோர் புகார் கொடுத்தனர். காவல்துறையினர் ஆசிரியரை கைது விசாரித்தனர். அவர் இதே போல பல மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

வடமாநிலங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெருகிவருகின்றன. சமீபத்தில்கூட ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவாவில் 8வது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது அம்மாநிலத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.