நெல்லை:

அரசு பள்ளி மாணவிகளை போட்டோ எடுத்ததாக ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அரசு பள்ளி ஆசிரியர் அந்தோணிசாமி. இவர் பள்ளி மாணவிகளை செல்போனில் போட்டோ எடுத்து மிரட்டியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அவரின் செல்போனை ஆய்வு செய்து பார்த்தில் அதில் பல மாணவிகளின் படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதை தொடர்ந்து அந்தோணிசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.