டில்லி

சிரியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து சி பி எஸ் இ 10 ஆம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக சி பி எஸ் இ 10 ஆம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் இன்னும் திருத்தப்படவில்லை.

மத்திய அரசு தற்போது விடைத்தாள்களைத் திருத்தும் பணிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அத்துடன் கொரோனா அச்சம் காரணமாக ஆசிரியர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே திருத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது.

அவ்வகையில் நாடெங்கும் 3000 பள்ளிகள் விடைத்தாள் திருத்தும் மையங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த 3000 மையங்களில் இருந்து ஆசிரியர்களின் வீடுகளுக்கு விடைத்தாள்கள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.