சென்னை:
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரி ஏற்கனவே வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ந்தேதி முதல் நடைபெறும் என்றும், சமுக விலகளுடன் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், 10-ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க கோரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார். அதில், கொரோனா முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் தேர்வு நடத்தினால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாதிப்பு என்றும், தேர்வு மையம் வருவதற்கான உரிய போக்குவரத்து வசதி செய்யாத நிலையில் தேர்வு நடத்தப்படக் கூடாது என தெரிவித்து இருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.