இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 700க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 17-ஐத் தொட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் உள்ளிட்ட மாஸ்டர் படக்குழுவினர் சமூக இடைவெளியை கடைபிடித்து வருவதாக நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் அவர், “பிரச்னை வரும் போகும்… கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க… எப்போது உண்மையில் வெளியில் போகமுடியவில்லையோ.. அப்போது நாங்கள் இப்படி?. சமூக இடைவெளியில் மாஸ்டர் குழு… நீங்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.