டில்லி

னியார் ரயில்களான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று முதல் மீண்டும் ஓடத் தொடங்கி உள்ளன.

 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாடெங்கும் பொதுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.   அதன் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்நாட்டு விமானச் சேவைகள் மற்றும் பேருந்துகள் இயங்கி வருகின்றன.    ஆயினும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.  புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ஷராமிக் ரயில்கள் மட்டும் இயங்கின.

தற்போது பொதுமக்களுக்கான சிறப்பு ரயில்கள் குறைந்த எண்ணிக்கையில் இயங்குகின்றன.   தனியார் பங்களிப்புடன் இயங்கி வரும் லக்னோ – டில்லி மற்றும் அகமதாபாத் – மும்பை தேஜாஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டிருந்தன.  பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் பயணிகளுக்கு ரயில் சேவை பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதையடுத்து  ஐ ஆர் சி டி சி நேற்று முதல் தேஜாஸ் ரயில்களை மீண்டும் இயக்கத் தொடங்கி உள்ளது.  காசி – இந்தூர் இடையில் செல்லும் காசி மகாகால் ரயில் இயங்கவில்லை.

ஐ ஆர் சி டி சி இதற்காக ஒரு சில வழிமுறைகளை அறிவித்துள்ளது.

  • ரயிலில் ஒரு இருக்கை விட்டு மற்றொரு இருக்கை காலியாக வைக்கப்பட வேண்டும்.
  • ரயில் பெட்டியில் ஏறும் முன்பு பயணிகள் தெர்மல் செக் அப் செய்துக் கொள்ள வேண்டும்.  இருக்கைகளை மாற்றிக் கொள்ளக் கூடாது.
  • பயணிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு சானிடைசார், ஒரு முகக் கவசம், ஒரு முகமூடி மற்றும் ஒரு ஜோடி கையுறைகள் வழங்கப்படும்.
  • ரயில் பெட்டிகளில் குறிப்பாகச் சமையல் கூடம் மற்றும் கழிவறைகளில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.
  • பயணிகளின் சாமான்கள் மற்றும் கைப்பைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படும்.
  • பயணிகள் தங்கள் மொபைலில் ஆரோக்ய சேது செயலியைத் தரவிறக்கம் செய்து ஊழியர் கேட்கும் போது அதைக் காட்ட வேண்டும்.