பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று மாலை நடைபெறவுள்ள நிதிஷ்குமார் முதல்வர் பதவியேற்பு விழாவில், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி கலந்துகொள்ள மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களின் மனநிலைக்கு மாறாக, நிகழ்வுகள் நடைபெறுவதால், ஆர்ஜேடி தரப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மக்களின் தீர்ப்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக கிடைத்துள்ளது. மாநிலத்தின் போக்குகளை இந்தத் தீர்ப்பு மாற்றியுள்ளது. வேலையிழந்தவர்கள், விவசாயிகள், ஒப்பந்தப் பணியாளர்கள் மற்ற்றும் ஆசிரியர்கள் ஆகியோரிடம் கேட்டுப் பாருங்கள் தெரியும்; பீகாரில் என்ன நடக்கிறதென்று.

‍தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மோசடியை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் மற்றும் அதற்கெதிராக உள்ளனர். நாங்கள் பொதுமக்களின் பிரதிநிதிகள் என்பதால், தற்போது அவர்களின் பக்கம் நிற்பதற்கு முடிவு செய்துள்ளோம் என்று ஆர்ஜேடி கட்சியின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தபால் வாக்குகள் கடைசியாக எண்ணப்பட்ட தொகுதிகளில், அவற்றை மீண்டும் முதலில் எண்ண வேண்டும் என்றுள்ளார் தேஜஸ்வி.