ஐதராபாத்: உச்சகட்ட வெயிலில் தகித்துக்கொண்டுள்ளது தெலுங்கான மாநிலம். அங்கே, 47 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் அதிகமாக வெப்பம் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்திலேயே மிக அதிகபட்சமாக மஞ்சேரியல் மாவட்டத்தின் நீல்வாய் பகுதியில் 47.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கடுத்து, ஜக்தியால் மாவட்டம், பெட்டபள்ளி மாவட்டம், அடிலாபாத் மாவட்டம், வாரங்கல் மாவட்டம் மற்றும் ஜெயஷங்கர் – பூபல்பள்ளி மாவட்டம் ஆகியவற்றில் அதிகபட்ச வெப்பம் நிலவுகிறது.

மேலும், செகந்திராபாத் மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களின் பல பகுதிகளை உள்ளடக்கிய மெட்கல் – மல்கஜ்கிரி மாவட்டத்திலும், வெப்பம் 46.6 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகியுள்ளது. அதேசமயம், ரங்காரெட்டி மாவட்டமும் உஷ்ணத்திலிருந்து தப்பவில்லை.