சென்னை:

 

தேசிய அளவில் 3வது அணி அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார்.

 

அவர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

முன்னதாக கோபாலபுரத்தில் சந்திரசேகர ராவை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். இதன் பின்னர் ஸ்டாலினுடன் 3வது அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.