மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதால், கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். புதிய தலைவரை வரும் ஜூன் மாதம் தேர்வு செய்ய, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராகுல் காந்தியை உடனடியாக காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என டெல்லி மற்றும் சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டிகள் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டியும், ராகுல் காந்தி கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

தெலுங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், மக்களவை உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் முன்னிலையில், அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தது.

மாநில நிர்வாகிகள், கட்சியின் 33 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

– பா. பாரதி