ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கால்பதித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மை பெற்று வருகிறது. இதன் காரணமாக, மாநகராட்சி பாஜகவசம் ஆகும் நிலை உருவாகி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 1ம் தேதி நடைபெற்றது.  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில், ஆளும் கட்சியான  தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ் கட்சி  (எஐஎம்ஐஎம்) உள்பட பல கட் கட்சிகள் போட்டியிட்டன. ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.  தேர்தல் வாக்கு பதிவு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

தற்போதை நிலையில்,  80 க்கும் மேற்பட்ட வார்டுகளில் முன்னிலையில் உள்ளது ஆளும் கட்சியாக உள்ள தெலங்கானா ராஷ்டீரிய சமிதி 2 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது .

மாநகராட்சி தேர்தலின்போது, பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால், டிஆர்எஸ் – பாஜ இடையே நேரடி போட்டி ஏற்பட்டது.
மதியம் 12 மணி நிலவரப்படி, முடிவுகள் தெரிந்த 139 வார்டுகளில் பா.ஜ., 88லும், டிஆர்எஸ் 32லும், ஏஐஎம்ஐஎம் 17லும் காங்கிரஸ் 2 வார்டிலும் முன்னிலையில் உள்ளன. இதன் காரணமாக பாஜக மாநகராட்சியை கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது.