ஐதராபாத்:

தெலுங்கானா தொழிலாளர் துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வருபவர் ஷாசங் கோயல். இவரது மகன் சுபம் கோயல் அமெரிக்கா பெடரல் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார்.

இவர் நண்பருடன் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் சென்றார். பின்னர் அங்கிருந்து கலிபோர்னியாவிற்கு செல்ல இருந்தார். இஸ்தான்புல் க¬வீதிக்கு நண்பர்களுடன் சென்ற சுபத்தை வழிமறித்த கொள்ளையர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

சுபம் பணம் கொடுக்க மறுத்ததால் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுபம் பரிதாபமாக இறந்தார். இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உதவியுடன் சுபத்தின் உடலை இந்தியா கொண்டு வரப்பட்டது இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.