ஐதராபாத்: தெலுங்கானாவில் கனமழை எதிரொலியாக கடந்த ஒரு வாரத்தில் 70 பேர் பலியாகி உள்ளனர்.

வடகிழக்கு பருவமழையையொட்டி தெலுங்கானாவில் கனமழை பெய்து வருகிறது.  கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அம்மாநிலத்தில் கனமழை பெய்துள்ளது.
இந் நிலையில், தெலுங்கானாவில் கனமழை தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி கடந்த ஒரு வாரத்தில் 70 பேர் பலியாகி உள்ளனர் என்று அமைச்சர் கே.டி. ராமாராவ் தெரிவித்து உள்ளார்.
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களது வாழ்விடங்களை விட்டு நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கனமழைக்கு ஐதராபாத் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் 33 பேர் பலியாகி உள்ளனர்.  பிற மாவட்டங்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.