தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் மாநகராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கிறது.

இந்த ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ் – காங்கிரஸ் – பா.ஜக. இடையே கடும் போட்டி நிலவுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜனசேனா என்ற கட்சியை ஆரம்பித்த நடிகர் பவன் கல்யாண், ‘’இந்த மாநகராட்சி தேர்தலில் எனது கட்சி 60 வார்டுகளில் போட்டியிடும்’’ என அறிவித்தார்.

இந்த நிலையில் பவன் கல்யாணை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சந்தித்து, “ஜனசேனா கட்சி, ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வை ஆதரிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து தனது கட்சி, இந்த தேர்தலில் போட்டியிடாது என அறிவித்துள்ள பவன் கல்யாண். “தேர்தலில் பா,ஜ,க.வை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன்” என்றும் கூறியுள்ளார்.

பவனின் இந்த அறிவிப்பால் ஜனசேனா கட்சி தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.

– பா. பாரதி