மதுரை:

மிழகத்தில் கோவில் வளாகங்களில் செயல்பட்டு வரும்  கடைகளை அகற்ற டிச.31 வரை அவகாசம் அளித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

துரை மீனாட்சி அம்மன்  கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில்  தீ பிடித்ததை தொடர்ந்து,  தமிழகத்தில் உள்ள கோவில் வளாகங்களில் இருக்கும் கடைகளை அகற்ற அரசு நடவடிக்கை  மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து தமிழக அரசும் கடைகளை அகற்ற உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கோவில் வளாகங்களில் கடைகளை வைத்துள்ள வணிகர்கள் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில், கடைகளை அகற்ற மேலும்  கால அவகாசத்தை நீட்டித்து  கோர்ட்டு  உத்தரவிட்டுள்ளது. கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுவதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.