பாட்னா :

பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் அவரது ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த 29 பேர், அமைச்சர்களாக உள்ளனர். அவர்களில் 5 பேர் எம்.எல்.சி.க்கள். அவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

எஞ்சிய 24 அமைச்சர்கள் களம் இறங்கினார்கள். சிலர் தொகுதி மாறி போட்டியிட்டார்கள். இவர்களில் 10 அமைச்சர்கள் இந்த தேர்தலில் தோற்று போனார்கள்.

தோல்வி அடைந்தவர்களில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் 8 பேர் . பா.ஜ.க.வை சேர்ந்த அமைச்சர்கள் இரண்டு பேர்.

நிதீஷ்குமாரும் மேல் சபை உறுப்பினராக இருப்பதால், இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

– பா. பாரதி