தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் பாலு என்பவர், சில தினங்களுக்கு முன்னர் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

அங்குள்ள பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் தனது மகன் சரணை பீடி வாங்கி வருவதற்கு கடைக்கு அனுப்பி உள்ளார். அவன், தாமதமாக வந்ததால் ஆத்திரம் அடைந்த பாலு, மகனை அடித்து உதைத்துள்ளார்.

கோபம் தணியாத நிலையில் ‘டர்பைண்டல்’ ஆயிலை எடுத்து மகன் மீது ஊற்றியதோடு, அவன் மீது தீக்குச்சியை பற்ற வைத்து வீசினார்.
உடல் முழுவதும் கருகிய நிலையில் அலறி துடித்த சிறுவன் சரணை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் சரண் உயிர் இழந்தான்.

– பா. பாரதி