ல்கேரியா

ல்கேரிய நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பல்கேரிய நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் உலக அளவில் 19 ஆம் நிலையில் உள்ளார்.    இவருக்குச் சர்வதேச அளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.   இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச்சுட்ன் விளையாடினார்.

நோவிக் ஜோகோவிச் தற்போது உலகின் முதல் நிலையில் உள்ள ஆட்டக்காரர் ஆவார். இவர்கள் இருவரும் விளையாடியது ஒரு காட்சி போட்டி ஆகும்.  மொனோகாவில் இருந்து  திரும்பிய பிறகு இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

டிமிட்ரோவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளதால் என்னுடன் தொடர்பில் இருந்தோர் அனைவரும் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்  உங்களுக்கு நான் ஏதும் தீங்கு விளைவித்திருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி” எனப் பதிந்துள்ளார்.