சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்கினார். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது சமூக விரோதிகள் ஊடுறுவியதால் வன்முறை வெடித்தது என்று ரஜினி கூறினார்.

இதற்கு ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர், போராட்ட ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘தமிழ்நாட்டுக்கு யாராவது வந்து நல்லது செய்யட்டும் என்கிற எண்ணத்தை விட… ரஜினியால் நல்லது எதுவும் நடந்து விடக் கூடாதே என்கிற பதட்டம்தான இங்கு நிறைய பேருக்கு…ரஜினி நல்ல மனிதர்’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.