லண்டன்: இன்று இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள முக்கியப் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ரோகித் ஷர்மா, ராகுல், விராத் கோலி, விஜய் சங்கர், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஷாஹல் மற்றும் பும்ரா ஆகிய 11 நபர்களே அந்த உத்தேசப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்ந்து சொதப்பும் விஜய் சங்கரை நீக்கிவிட்டு, ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றே தெரிகிறது. அவர், ஆறாவது பவுலராக பயன்படுவார் என்ற ஒரே காரணத்திற்காக, இந்திய பேட்டிங் வரிசையின் பலம் குறித்து கவலை கொள்ளப்படவில்லை என்றே தெரிகிறது.

அதேசமயம், விஜய் சங்கர் அணியில் தொடர்ந்து நீடிப்பதில் அரசியல் விளையாடுகிறது என்று ஒரு சாராரும், வெற்றிக் கூட்டணியை மாற்றுவதில் யாருக்கும் விருப்பமில்லை என்று இன்னொரு சாராரும் கூறிவருகின்றனர்.