mancheter featured
பயங்கரவாத குற்றங்களுக்கான சந்தேகத்தின் பெயரில் மான்செஸ்டர் விமான நிலையத்தில் ஒருவர் கைது
ஒரு 18 வயது வாலிபர் “சிரியா தொடர்பான பயங்கரவாத செயல்களுக்காக,” சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார் என்று பிரிட்டனின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் போலீஸ் கூறினர். சனிக்கிழமை காலை பிரிட்டனுக்கு வந்த சேர்ந்த போது அவர் கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஏப்ரல் 4 அன்று ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் கைது செய்த பிறகு சனிக்கிழமை கைது பின் தொடர்ந்தது. பிர்மிங்காமை சர்ந்த ஒரு ஜோடி, அதாவது ஒரு 24 வயது ஆண் மற்றும் ஒரு 20 வயது பெண் தற்போது போலீஸ் பிணையில் இருப்பதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் போலீஸ் கூறியது.
இதற்கிடையில் பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்களில் தொடர்புடைய
தாக சந்தேகத்தின் பேரில் பர்மிங்காம் நகரில் பயங்கரவாத எதிர்ப்பு சோதனைகள் நடத்திய போது பிர்மின்கமை சேர்ந்த மற்றொரு ஐந்து பேர் வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டனர்.
இரண்டு செயல்பாடுகளுக்கும் தொடர்பு இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
manchester 1
பர்மிங்காம் வந்ததாகக் கூறப்படும் பாரிஸ் மற்றும் புரூஸல்சில் தாக்குதல்களில் தொடர்புடைய “தொப்பி மனிதன்”, என்று அழைக்கப்படும் குண்டு வைத்த முகம்மது அப்ரினியின் கைதிற்கு வியாழக்கிழமை நடந்த கைது சம்பந்தமுடையது என்று புரிந்து கொள்ளப்பட்டது.
“மான்செஸ்டர் விமான நிலையத்தில் பயணிகளுக்கும் மற்ற பொதுமக்களுக்கும் இந்த கைதுகள் தொடர்பாக எந்த ஆபத்தும் இல்லை”.
“கடந்த 48 மணி நேரத்தில் நடந்த இந்தக் கைதுகளுக்கும் விசாரணைக்கும் பிர்மின்கமைச் சார்ந்த ஐந்து பேரின் பயங்கரவாதக் கைதுக்கும் சம்பந்தமில்லை” என்று போலீஸார்  கூறினர்.
manchester 2
சனிக்கிழமையன்று மான்செஸ்டர் விமான நிலையத்தில் பர்மிங்காமை சார்ந்த ஒ