ப்ளின்

கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுடன் அயர்லாந்து துவக்குகிறது.

இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வாரியம் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு டெஸ்ட் போட்டிகள் விளையாட அனுமதி அளித்துள்ளது.  ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட் போட்டியை அடுத்த மாதம் இந்தியாவுடன் விளையாட உள்ளது.  அயர்லாந்து நேற்று முன் தினம் தனது முதல் டெஸ்ட்  போட்டியை டப்ளின் நகரில் பாகிஸ்தானுடன் விளையாட தொடங்கியது.

ஆட்டம் தொடங்கியதுமே மழை பெய்யத் தொடங்கியதால் முதல் நாள் ஆட்டம் தடைபட்டது.   நேற்று இரண்டாம் நாள் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.   டாசில் வெற்றி பெற்ற அயர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.    இந்த ஆட்டம் தொடங்கும் முன்பு அயர்லாந்து வீரர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கண்ணிர் சிந்தி உள்ளனர்.   இது அயர்லாந்து கிரிக்கெட் ரசிகர்களையும் கண்ணீர் விட செய்துள்ளது.